திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

வியாழன், 20 ஜூலை, 2023

உங்கள் குழந்தையின் குடல் நலம்தான ?

     


    விடிந்ததும் அம்மா எனக்கு கக்கா வரல என்று சொல்லும் குழந்தைகளும், எனக்கு பசியே இல்லை என்று கூறி டிபன் பாக்ஸ் காலி பண்ணாமல் வீட்டிற்கு திரும்பும் குழந்தைளும்,பிரதர் எது சாப்பிட்டாலும் வயிறு மந்தமா இருக்கு என்று கூறும் இளைஞர்கள் இப்படி வயறு,குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகி வருகின்றன.குடல் என்பது நமது செரிமான அமைப்பாகும்,இது நமது வயறு, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகளாக பிரிந்துள்ளது. உணவின் சத்தைக் கிரகித்து தேவையற்ற சக்கை பொருட்களை மலமாக வெளியேற்ற நமது குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.ஏனென்றால் உடல் ஆரோக்கியத்தில் நம் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை அதனுள்ளே இடுகிறோம் என்பதை பொருத்தே நமது ஆரோக்கியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

 அடிக்கடி உண்டாகும் மலச்சிக்கல்,ஆசன வாய் வழியாக வாயு பிரிதல், வயிற்றோட்டம்,நெஞ்சு எரிச்சல்,சிறிது உணவு உண்டாலும் வயிறு மந்தமாதல், உணவு உண்ட சிறிது நேரத்தில் மலம் கழிதல் போன்ற குறிகுணங்கள் இருந்தால் உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணருங்கள். மேலும் எந்தவித உணவு கட்டுப்பாடுகளும்,உடல் பயிற்சிகளும் இல்லாமலும் உங்கள் எடை கூடிக் குறைந்தாலும் உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும். இந்த வகை பிரச்சனை தொடர்ந்து காணப்படும் போது நீங்கள் உண்ணும் உணவின் சத்தை உங்கள் குடல் சரிவர உள்ளே கிரகிக்காமல் போகலாம்.

Gut microbiome:

      இந்த காலத்தில் Gut health மற்றும் Gut microbiome என்ற வார்த்தைகள் மிக பேசும் பொருளாக உள்ளது. Gut health என்றால் குடல் ஆரோக்கியம், Gut microbiome என்றால் நமது குடல் பகுதியில் வாழும் பாக்டீரியாக்களை குறிக்கும். நமது குடல் இவற்றிற்கு உலகம் ஒரு உலகம் போன்றது, எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் அங்கு உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நமது உடலிற்கு நன்மை செய்யக்கூடியவை ஆகும். நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை சரியான முறையில் கட்டமைத்து,சர்க்கரை நோய், இதய நோய், மன நோய்கள், Auto immune disease மற்றும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் ஆற்றல் உடையவை இவை.


    அதிகப்படியான மனஅழுத்தம், தூக்கமின்மை, அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளுதல், மேற்கத்திய உணவு கலாச்சாரம் போன்றவை நமது குடல் ஆரோக்கியத்தை பெரிதும் கெடுக்கின்றது.


     இப்படிப்பட்ட குடல் ஆரோக்கியமாக இருக்க நமது சித்த மருத்துவத்தில் சிறப்பான வழிகள் உள்ளன.குறிப்பாக குழந்தைகளுக்கு பசியை தூண்டும் விதமாக பஞ்ச தீபாக்கினி சூரணம் உள்ளது. தினமும் உணவுக்கு பின் 2 கிராம் தேனில் கலந்து கொடுத்தால் போதும். உங்கள் குழந்தையின் சீரண சக்தி நன்கு அதிகரிக்கும். இந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை அன்றாடம் உணவில் சேரும் குழம்பில் ஒரு ஸ்பூன் சேர்த்து குழம்பு வைப்பது தென் நாட்டினர் வழக்கம். பெரியவர்கள்,அஷ்ட சூரணம் என்னும் சூரணத்தை தினம் 4 கிராம் உணவிற்கு பின் எடுக்க ஜீரண சக்தியை அதிகபடுத்தும்.

    அடிக்கடி வயிற்றோட்டம் மற்றும் வயிற்று வலி உள்ள குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு தயிர் சுண்டி சூரணம் என்ற சூரணத்தை 2-4 கிராம் அளவு தண்ணீரில் கலந்து கொடுக்க வயிற்றோட்டம் நின்றுவிடும்.மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு மேனித்தைலம் என்ற எண்ணெய் மருந்தை 2-4 மில்லி இரவு படுக்கும் முன் கொடுக்க குழந்தைகளுக்கு நன்கு மலம் கழிவது மட்டுமல்லாமல், வயிற்றில் உள்ள புழுக்களும் சாகும். குழந்தைகளுக்கு மலம் கழியும் போது வரும் கெட்ட நாற்றத்தையும் இது நீக்கும்.பெரியவர்கள்,  நிலவாகை சூரணம், திரிபலா சூரணம் போன்றவற்றை இரவு நேரம் 1 spoon எடுக்கலாம்.

    உணவு முறையில் நமது பாரம்பரிய உணவான பழைய சாதத்தில் அதிகபடியான உடலிற்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளது. அதை நமது உணவு அட்டவணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு probiotic இருக்கும் தயிர்,யோகர்ட் போன்றவற்றை வாங்கி தரலாம், அவை குழந்தைகளுக்கு பிடித்தார் போன்று பல வகையான பழ சுவைகளில் கிடைக்கிறது.மேற்கண்ட பிரச்சனை வராமல் இருக்கவும், நமது குடல் ஆரோக்கியமாக இருக்கவும் சித்த மருத்துவத்தில் பேதி மருத்துவம்(Purgation Therapy) என்ற மருத்துவ முறை உள்ளது. இம்மருத்துவ முறையை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கையாள வேண்டும். இதனை அருகில் உள்ள சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்பெறலாம்.

நன்றி
மருத்துவர் விக்னேஷ் குமார். கி

8778587349.

திங்கள், 17 ஜூலை, 2023

Chronic Fatigue Syndrome என்னும் சோர்வு நோய்

     நாள் முழுவதும் அதிக சோர்வு, கவனக் குறைவு, தூக்கமின்மை, உடல்  உறுப்புகளின் கோளாறுகள், உடல் வலி, தலைபாரம் மற்றும் அன்றாட வேலைகளை செய்வதில் சிரமம் , எப்போதும் தூங்கி கொண்டே இருக்கலாம் என்ற எண்ணம் போன்ற நோய்க் குறிகுணங்களை கொண்டு நிரந்தர மற்றும் நிலையான சோர்வு நிலைக்கு வழி வகுக்கும் நோய். இந்த சோர்வு நோய் ஆறு மாதங்களுக்கு மேலும் நீடிக்குமானால் அதை நாள்பட்ட சோர்வு நோய் நிலை என்று அழைக்கப்படும். பாதிக்கபட்டவரின் வாழ்க்கை தரம் பெரும் அளவில் பாதிக்கப்படும்.   அதனால், முன்னரே நோயை கண்டறிந்து தக்க மருத்துவம் செய்தால் பாதிக்கப்பட்டவரை மிக எளிதாக குணப்படுத்தலாம்.

 காரணங்கள் 

இந்த நோய் குறிப்பிட்டு இல்லாமல் பல காரணங்களால் உருவாகலாம் அவை, 

1. மரபியல் ரீதியாக ஒரு குடும்பத்திற்கு உள்ளே இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். உதாரணம் ஒரு தாய்க்கோ அல்லது தந்தைக்கோ இந்த நோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் வர வாய்ப்பு அதிகம்.

2. சிலருக்கு சில வகை பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு பிறகு இந்த நோய் நிலை உருவாகும்.

3. உடல் மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புகள் சொல்லபோனால் சாலை விபத்து, அறுவை சிகிச்சை அல்லது நாம் நேசித்த ஒருவரை இழக்கும் போது வரும் உணர்வு ரீதியான பாதிப்புகளை தொடர்ந்து இந்த நோய் உண்டாக்கும்.

4. உணவு முறையில் உள்ள பாதிப்புகளான சரியான சத்தான உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பதும் மற்றும் உணவு வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறு போன்றவை தொடர்ந்து இந்த நோய் நிலையை உண்டாக்கும். மேலும் இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்த்தல் போன்றவற்றால் நமது தூக்க சுழற்சியில் பாதிப்பு உண்டாகி இந்த நோய் நிலை உண்டாகும். மேலும் வைட்டமின் டி என்னும் சத்து குறைபாடு போன்றவை  இந்த நோய் உண்டாக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று.

5.சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் உண்டாகும். குறிப்பாக,  ஆண்களை விடவும் பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

6.ஃபைப்ரோமயால்ஜியா, தைராய்டு சுரப்பி கோளாறு, மன அழுத்த நோய் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்குதல் உண்டாகும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

7. திடமான மனநிலை இல்லாதவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

8. அதிர்ச்சிகரமான செய்தி மற்றும் சம்பவங்கள் பார்த்தல் போன்றவை இந்த நோய் நிலையின் குறிகுணங்களை அதிகரிக்கும்.

சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வை சித்தர்கள் சொல்லி வைத்து சென்று உள்ளனர்.

    ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் அமுக்குரா கிழங்கு சூரணம், திரிகடுகு சூரணம், பிரமி சூரணம் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். நாள்பட்ட நிலையில் உள்ளவர்கள் உள் மருந்துகளுடன் சித்த மருத்துவ புற மருத்துவ சிகிச்சைகளான வேது, பொட்டணம், தொக்கணம், நசியம், யோக மருத்துவம் போன்ற சிகிச்சை முறைகளை பெற்று விரைவில் நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

நன்றி
மருத்துவர் விக்னேஷ் குமார். கி
8778587349.


சனி, 15 ஜூலை, 2023

சாக வாழ்வை தரும் மூலிகை குடிநீர்கள்

 

            நோயற்ற வாழ்வே உயர்ந்த செல்வம், மனித உடல் பல வகையான

அகம் மற்றும் புற சூழ்நிலைகளின் தாக்கங்களை சமாளிக்க முடியாமல்

போகும் போது உடலில் நோய் நிலை உண்டாகும், இந்த சூழ்நிலை

தாக்கங்களை நாம் அன்றாடம் பயன் படுத்தும் விதமாக சித்த மருத்துவம்

மூலிகை நீர்களை வழங்கி உள்ளது.பின் வரும் மூலிகை நீர்கள் பற்றி

தெரிந்து பயன் அடையவும்.



1)தேற்றான் கொட்டை நீர்

உபயோகம் : இயற்கை நீர் சுத்திகரிப்பு

செய்முறை:

தேற்றான் கொட்டைகளை அம்மியில் வைத்து இழைத்து நீரில் கலந்து 8 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும்.

பயன்கள்:

*நீரில் உள்ள மாசை அகற்றுவதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

*சிறுநீர் பிரச்சனை மற்றும் வயிற்று போக்கை குணமாகும்.


2)செம்பருத்தி தேநீர்

உபயோகம்: இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உள்ள பிரச்சனைக்கு

செய்முறை:

    2 செம்பருத்தி பூவில் உள்ள காம்பு, மகரந்த குழாய்களை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் 1 டம்ளர் சூடான நீரில் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் பிறகு வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு சிறிது எழுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.

பயன்கள்:

*தினமும் அருந்தி வர சருப பொலிவு தரும்

*மாதவிடாய் சீராகும்

*உயர் இரத்த அழுத்தம் சீராகும்.


3)நெல்லி ஊறல் நீர்.

உபயோகம்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க.

செய்முறை:

    இரவு 10 நெல்லி வற்றலை இரண்டு டம்ளர் நீரில் ஊறவைக்க வேண்டும்.காலையில் எழுந்ததும் நன்றாக கலக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.

பயன்கள்:

*தினமும் குடிக்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

*தலையில் நரைமுடி பரவுவது தடுக்கும்.

*முடி வளர்ச்சி அதிகரிக்கும்.


4)நன்னாரி ஊறல் நீர்

உபயோகம்:உடல் குளிர்ச்சி அடைய.

செய்முறை:

    நன்னாரி வேரை சுத்தம் செய்து இடித்து பொடியாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து,சூடு ஆறியதும் வடிகட்டி எழுமிச்சை சாறு கலந்து பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.

பயன்கள்:

*உடலில் வியர்வை அதிகரிக்க செய்யும்.

*இரத்தம் சுத்தமாகும்.

*உடல் சூடு தணியும்.

*தாகம் கட்டுப்பாடும்.

*சரும பிரச்சனைகள் தீரும்.


4)வில்வ இலை ஊறல் நீர்.

உபயோகம்:பித்தம் தீர 

செய்முறை:

    ஆறு வில்வ இலைகளை இடித்து ஒரு டம்ளர் நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து பின் ஊறிய நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பயன்கள்:

*தினந்தோறும் குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும்,உடல் குளிர்ச்சி அடையும்.

*தீராத வயிற்று வலி தீரும்.

*சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


5)வெட்டி வேர் ஊறல் நீர்.

உபயோகம்: உடல் எரிச்சல் தனிய.

செய்முறை:

    வெட்டி வேரை சுத்தம் செய்து பொடியாக்கி தண்ணீரில் 3  மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி அருந்தவும்.

பயன்கள்:

*காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

*கண் எரிச்சல், அதிக தாகம், உடல் எரிச்சல் ன, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.


6)சீரக தண்ணீர்.

உபயோகம்: வயிற்று பிரச்சனை தீர.

செய்முறை:

    1 லிட்டர் நீரில் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தவும்.

பயன்கள்:

*காலையில் தினமும் அருந்தி வந்தால் செரிமான பிரச்சனை, வயிற்று வலி, உடல் பரும் தீரும்.





 


வியாழன், 13 ஜூலை, 2023

மருத மரம்-இதய நோய்கான அமிர்தம்

                                       
மருத மரம்

     இது இந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு மர வகுப்பை சேர்ந்த தாவரமாகும். மருது அல்லது மருதம் மரத்தை தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் ஸ்தல விருச்சமாக வணங்கி வருகிறோம். ஆறு மற்றும் ஆற்று பாங்கான இடங்களில் வளரும் இயல்பு உடையது. இதன் பட்டை அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்தது. குறிப்பாக, இதய நோய்களுக்கு காலம் தொட்டு இயற்கை மருத்துவத்தில் இந்த தாவரம் பயன்பாட்டில் உள்ளது. இதன் பட்டையில் அதிகப்படியான உயிர்ச் செயல் மூலப்பொருள்கள் உள்ளன. அவை சப்போனின், பிளேவனாய்டு போன்றவை அடங்கும்.
 இதன் தாவரவியல் பெயர் 
 Terminalia Arjuna  
 இதன் குணம் 
    தமரகவெப்பமுண்டாக்கி, உரமாக்கி இதன் செய்கைகள்.  அதாவது
Cardiac tonic என்று கூறலாம். 
    எண்ணற்ற ஆய்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மருத மரத்தின் மருத்துவப் பயனை அறிய நடத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக  இதய ரத்த நாள நோய் நிலையில் உள்ள  இதய நோயாளிகளில் பெரிய அளவில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
 இதன் பயன்கள் 
    காஞ்சிபுரம் சுற்றி உள்ள வைத்தியர்கள் மருதம் பட்டையை பொடியாக பொடித்து சிறிது தண்ணிரில் கலந்து ஒற்றைத் தலைவலிக்கு மூக்கில் இரண்டொரு சொட்டு விடுகின்றனர்  மற்றும் சொத்தை பற்க்களில் உள்ள புழுக்களை கொல்ல இந்த முறையை பயன்பாடு செய்கிறார்கள்.
    கேரளாவில் உள்ள மலபார் பழங்குடியினர் காதில் உள்ள வலிகளுக்கு இந்த மரத்தின் இலை சாற்றை இரண்டொரு துளி காதில் விடுகின்றனர் மற்றும் இதன் பட்டையை தமரக நோய்க்கு  பயன்படுத்துகின்றனர்.
    ஒரிசா மாநிலம் சுண்டர்கர்ஹ் மாவட்டதில் வாழும் பழங்குடியினர் இந்த மரத்தின் பட்டையை பொடியாக செய்து அரிசி சுத்தம் செய்த நீரில் கலந்து சீறுநீரில் ரத்தம் வரும் நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
    மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் இதன் பட்டையை பச்சையாக வாயிலிட்டு மென்று அதன் சாற்றை வயிறு புண், நெஞ்சு எரிசல் போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பயன் படுத்துகின்றனர்.
    சக்கரடட்டா என்னும் பழங்கால மருத்துவர் இதன் இலை கசாயத்துடன் நெய் கலந்து இதய நோய்களுக்கு பயன்படுத்தும் படி அறிவுறுத்தி உள்ளார் 
    இதன் பட்டை கஷாயம் புண்களை கழுவவும் மற்றும் இதன் இலை சாம்பல் தேள் கடி மற்றும் பாம்பு கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப் படுகிறது.
 இதய நோய்களுக்கான கசாயம் 

    மருதம்பட்டை, அரசம்பட்டை, வில்வப்பட்டை வகைக்கு சம அளவு 

சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கப்பட்டை இவை மேற்கண்டவற்றில்  

பாதி அளவு. இவற்றை அரைத்து 5 கிராம் எடுத்து 200 மி.லி நீரில் 

60 மி.லியாக காய்ச்சி வடித்து, காலை மாலை கொடுத்துவர,  

இருதயத்தை வன்மைப்படுத்தி,இருதய நோயாளிகளுக்கு  

சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 மரத்தில் பட்டையை எடுக்க வேண்டிய முறை: 
    மரத்தில் இருக்கும் மேல் சுற்றி உள்ள பட்டையை மட்டும் உரித்து எடுத்தால் போதும். பின் நிழலில் காயவைத்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருந்து கடைகளில் மருதம் பட்டை கசாயம், சூரணம்,  

அரிஷ்டம், மாத்திரை போன்றவை கிடைக்கின்றன. இதை தக்க  

மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்