வியாழன், 13 ஜூலை, 2023

மருத மரம்-இதய நோய்கான அமிர்தம்

                                       
மருத மரம்

     இது இந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு மர வகுப்பை சேர்ந்த தாவரமாகும். மருது அல்லது மருதம் மரத்தை தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் ஸ்தல விருச்சமாக வணங்கி வருகிறோம். ஆறு மற்றும் ஆற்று பாங்கான இடங்களில் வளரும் இயல்பு உடையது. இதன் பட்டை அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்தது. குறிப்பாக, இதய நோய்களுக்கு காலம் தொட்டு இயற்கை மருத்துவத்தில் இந்த தாவரம் பயன்பாட்டில் உள்ளது. இதன் பட்டையில் அதிகப்படியான உயிர்ச் செயல் மூலப்பொருள்கள் உள்ளன. அவை சப்போனின், பிளேவனாய்டு போன்றவை அடங்கும்.
 இதன் தாவரவியல் பெயர் 
 Terminalia Arjuna  
 இதன் குணம் 
    தமரகவெப்பமுண்டாக்கி, உரமாக்கி இதன் செய்கைகள்.  அதாவது
Cardiac tonic என்று கூறலாம். 
    எண்ணற்ற ஆய்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மருத மரத்தின் மருத்துவப் பயனை அறிய நடத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக  இதய ரத்த நாள நோய் நிலையில் உள்ள  இதய நோயாளிகளில் பெரிய அளவில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
 இதன் பயன்கள் 
    காஞ்சிபுரம் சுற்றி உள்ள வைத்தியர்கள் மருதம் பட்டையை பொடியாக பொடித்து சிறிது தண்ணிரில் கலந்து ஒற்றைத் தலைவலிக்கு மூக்கில் இரண்டொரு சொட்டு விடுகின்றனர்  மற்றும் சொத்தை பற்க்களில் உள்ள புழுக்களை கொல்ல இந்த முறையை பயன்பாடு செய்கிறார்கள்.
    கேரளாவில் உள்ள மலபார் பழங்குடியினர் காதில் உள்ள வலிகளுக்கு இந்த மரத்தின் இலை சாற்றை இரண்டொரு துளி காதில் விடுகின்றனர் மற்றும் இதன் பட்டையை தமரக நோய்க்கு  பயன்படுத்துகின்றனர்.
    ஒரிசா மாநிலம் சுண்டர்கர்ஹ் மாவட்டதில் வாழும் பழங்குடியினர் இந்த மரத்தின் பட்டையை பொடியாக செய்து அரிசி சுத்தம் செய்த நீரில் கலந்து சீறுநீரில் ரத்தம் வரும் நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
    மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் இதன் பட்டையை பச்சையாக வாயிலிட்டு மென்று அதன் சாற்றை வயிறு புண், நெஞ்சு எரிசல் போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பயன் படுத்துகின்றனர்.
    சக்கரடட்டா என்னும் பழங்கால மருத்துவர் இதன் இலை கசாயத்துடன் நெய் கலந்து இதய நோய்களுக்கு பயன்படுத்தும் படி அறிவுறுத்தி உள்ளார் 
    இதன் பட்டை கஷாயம் புண்களை கழுவவும் மற்றும் இதன் இலை சாம்பல் தேள் கடி மற்றும் பாம்பு கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப் படுகிறது.
 இதய நோய்களுக்கான கசாயம் 

    மருதம்பட்டை, அரசம்பட்டை, வில்வப்பட்டை வகைக்கு சம அளவு 

சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கப்பட்டை இவை மேற்கண்டவற்றில்  

பாதி அளவு. இவற்றை அரைத்து 5 கிராம் எடுத்து 200 மி.லி நீரில் 

60 மி.லியாக காய்ச்சி வடித்து, காலை மாலை கொடுத்துவர,  

இருதயத்தை வன்மைப்படுத்தி,இருதய நோயாளிகளுக்கு  

சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 மரத்தில் பட்டையை எடுக்க வேண்டிய முறை: 
    மரத்தில் இருக்கும் மேல் சுற்றி உள்ள பட்டையை மட்டும் உரித்து எடுத்தால் போதும். பின் நிழலில் காயவைத்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருந்து கடைகளில் மருதம் பட்டை கசாயம், சூரணம்,  

அரிஷ்டம், மாத்திரை போன்றவை கிடைக்கின்றன. இதை தக்க  

மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்


0 comments:

கருத்துரையிடுக