நோயற்ற வாழ்வே உயர்ந்த செல்வம், மனித உடல் பல வகையான
அகம் மற்றும் புற சூழ்நிலைகளின் தாக்கங்களை சமாளிக்க முடியாமல்
போகும் போது உடலில் நோய் நிலை உண்டாகும், இந்த சூழ்நிலை
தாக்கங்களை நாம் அன்றாடம் பயன் படுத்தும் விதமாக சித்த மருத்துவம்
மூலிகை நீர்களை வழங்கி உள்ளது.பின் வரும் மூலிகை நீர்கள் பற்றி
தெரிந்து பயன் அடையவும்.
1)தேற்றான் கொட்டை நீர்
உபயோகம் : இயற்கை நீர் சுத்திகரிப்பு
செய்முறை:
தேற்றான் கொட்டைகளை அம்மியில் வைத்து இழைத்து நீரில் கலந்து 8 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும்.
பயன்கள்:
*நீரில் உள்ள மாசை அகற்றுவதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
*சிறுநீர் பிரச்சனை மற்றும் வயிற்று போக்கை குணமாகும்.
2)செம்பருத்தி தேநீர்
உபயோகம்: இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உள்ள பிரச்சனைக்கு
செய்முறை:
2 செம்பருத்தி பூவில் உள்ள காம்பு, மகரந்த குழாய்களை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் 1 டம்ளர் சூடான நீரில் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் பிறகு வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு சிறிது எழுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.
பயன்கள்:
*தினமும் அருந்தி வர சருப பொலிவு தரும்
*மாதவிடாய் சீராகும்
*உயர் இரத்த அழுத்தம் சீராகும்.
3)நெல்லி ஊறல் நீர்.
உபயோகம்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க.
செய்முறை:
இரவு 10 நெல்லி வற்றலை இரண்டு டம்ளர் நீரில் ஊறவைக்க வேண்டும்.காலையில் எழுந்ததும் நன்றாக கலக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.
பயன்கள்:
*தினமும் குடிக்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
*தலையில் நரைமுடி பரவுவது தடுக்கும்.
*முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
4)நன்னாரி ஊறல் நீர்
உபயோகம்:உடல் குளிர்ச்சி அடைய.
செய்முறை:
நன்னாரி வேரை சுத்தம் செய்து இடித்து பொடியாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து,சூடு ஆறியதும் வடிகட்டி எழுமிச்சை சாறு கலந்து பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
பயன்கள்:
*உடலில் வியர்வை அதிகரிக்க செய்யும்.
*இரத்தம் சுத்தமாகும்.
*உடல் சூடு தணியும்.
*தாகம் கட்டுப்பாடும்.
*சரும பிரச்சனைகள் தீரும்.
4)வில்வ இலை ஊறல் நீர்.
உபயோகம்:பித்தம் தீர
செய்முறை:
ஆறு வில்வ இலைகளை இடித்து ஒரு டம்ளர் நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து பின் ஊறிய நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
பயன்கள்:
*தினந்தோறும் குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும்,உடல் குளிர்ச்சி அடையும்.
*தீராத வயிற்று வலி தீரும்.
*சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
5)வெட்டி வேர் ஊறல் நீர்.
உபயோகம்: உடல் எரிச்சல் தனிய.
செய்முறை:
வெட்டி வேரை சுத்தம் செய்து பொடியாக்கி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி அருந்தவும்.
பயன்கள்:
*காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
*கண் எரிச்சல், அதிக தாகம், உடல் எரிச்சல் ன, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.
6)சீரக தண்ணீர்.
உபயோகம்: வயிற்று பிரச்சனை தீர.
செய்முறை:
1 லிட்டர் நீரில் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தவும்.
பயன்கள்:
*காலையில் தினமும் அருந்தி வந்தால் செரிமான பிரச்சனை, வயிற்று வலி, உடல் பரும் தீரும்.
0 comments:
கருத்துரையிடுக