திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

சனி, 15 ஜூலை, 2023

சாக வாழ்வை தரும் மூலிகை குடிநீர்கள்

 

            நோயற்ற வாழ்வே உயர்ந்த செல்வம், மனித உடல் பல வகையான

அகம் மற்றும் புற சூழ்நிலைகளின் தாக்கங்களை சமாளிக்க முடியாமல்

போகும் போது உடலில் நோய் நிலை உண்டாகும், இந்த சூழ்நிலை

தாக்கங்களை நாம் அன்றாடம் பயன் படுத்தும் விதமாக சித்த மருத்துவம்

மூலிகை நீர்களை வழங்கி உள்ளது.பின் வரும் மூலிகை நீர்கள் பற்றி

தெரிந்து பயன் அடையவும்.



1)தேற்றான் கொட்டை நீர்

உபயோகம் : இயற்கை நீர் சுத்திகரிப்பு

செய்முறை:

தேற்றான் கொட்டைகளை அம்மியில் வைத்து இழைத்து நீரில் கலந்து 8 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும்.

பயன்கள்:

*நீரில் உள்ள மாசை அகற்றுவதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

*சிறுநீர் பிரச்சனை மற்றும் வயிற்று போக்கை குணமாகும்.


2)செம்பருத்தி தேநீர்

உபயோகம்: இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உள்ள பிரச்சனைக்கு

செய்முறை:

    2 செம்பருத்தி பூவில் உள்ள காம்பு, மகரந்த குழாய்களை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் 1 டம்ளர் சூடான நீரில் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் பிறகு வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு சிறிது எழுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.

பயன்கள்:

*தினமும் அருந்தி வர சருப பொலிவு தரும்

*மாதவிடாய் சீராகும்

*உயர் இரத்த அழுத்தம் சீராகும்.


3)நெல்லி ஊறல் நீர்.

உபயோகம்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க.

செய்முறை:

    இரவு 10 நெல்லி வற்றலை இரண்டு டம்ளர் நீரில் ஊறவைக்க வேண்டும்.காலையில் எழுந்ததும் நன்றாக கலக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.

பயன்கள்:

*தினமும் குடிக்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

*தலையில் நரைமுடி பரவுவது தடுக்கும்.

*முடி வளர்ச்சி அதிகரிக்கும்.


4)நன்னாரி ஊறல் நீர்

உபயோகம்:உடல் குளிர்ச்சி அடைய.

செய்முறை:

    நன்னாரி வேரை சுத்தம் செய்து இடித்து பொடியாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து,சூடு ஆறியதும் வடிகட்டி எழுமிச்சை சாறு கலந்து பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.

பயன்கள்:

*உடலில் வியர்வை அதிகரிக்க செய்யும்.

*இரத்தம் சுத்தமாகும்.

*உடல் சூடு தணியும்.

*தாகம் கட்டுப்பாடும்.

*சரும பிரச்சனைகள் தீரும்.


4)வில்வ இலை ஊறல் நீர்.

உபயோகம்:பித்தம் தீர 

செய்முறை:

    ஆறு வில்வ இலைகளை இடித்து ஒரு டம்ளர் நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து பின் ஊறிய நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பயன்கள்:

*தினந்தோறும் குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும்,உடல் குளிர்ச்சி அடையும்.

*தீராத வயிற்று வலி தீரும்.

*சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


5)வெட்டி வேர் ஊறல் நீர்.

உபயோகம்: உடல் எரிச்சல் தனிய.

செய்முறை:

    வெட்டி வேரை சுத்தம் செய்து பொடியாக்கி தண்ணீரில் 3  மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி அருந்தவும்.

பயன்கள்:

*காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

*கண் எரிச்சல், அதிக தாகம், உடல் எரிச்சல் ன, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.


6)சீரக தண்ணீர்.

உபயோகம்: வயிற்று பிரச்சனை தீர.

செய்முறை:

    1 லிட்டர் நீரில் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தவும்.

பயன்கள்:

*காலையில் தினமும் அருந்தி வந்தால் செரிமான பிரச்சனை, வயிற்று வலி, உடல் பரும் தீரும்.





 


வியாழன், 13 ஜூலை, 2023

மருத மரம்-இதய நோய்கான அமிர்தம்

                                       
மருத மரம்

     இது இந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு மர வகுப்பை சேர்ந்த தாவரமாகும். மருது அல்லது மருதம் மரத்தை தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் ஸ்தல விருச்சமாக வணங்கி வருகிறோம். ஆறு மற்றும் ஆற்று பாங்கான இடங்களில் வளரும் இயல்பு உடையது. இதன் பட்டை அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்தது. குறிப்பாக, இதய நோய்களுக்கு காலம் தொட்டு இயற்கை மருத்துவத்தில் இந்த தாவரம் பயன்பாட்டில் உள்ளது. இதன் பட்டையில் அதிகப்படியான உயிர்ச் செயல் மூலப்பொருள்கள் உள்ளன. அவை சப்போனின், பிளேவனாய்டு போன்றவை அடங்கும்.
 இதன் தாவரவியல் பெயர் 
 Terminalia Arjuna  
 இதன் குணம் 
    தமரகவெப்பமுண்டாக்கி, உரமாக்கி இதன் செய்கைகள்.  அதாவது
Cardiac tonic என்று கூறலாம். 
    எண்ணற்ற ஆய்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மருத மரத்தின் மருத்துவப் பயனை அறிய நடத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக  இதய ரத்த நாள நோய் நிலையில் உள்ள  இதய நோயாளிகளில் பெரிய அளவில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
 இதன் பயன்கள் 
    காஞ்சிபுரம் சுற்றி உள்ள வைத்தியர்கள் மருதம் பட்டையை பொடியாக பொடித்து சிறிது தண்ணிரில் கலந்து ஒற்றைத் தலைவலிக்கு மூக்கில் இரண்டொரு சொட்டு விடுகின்றனர்  மற்றும் சொத்தை பற்க்களில் உள்ள புழுக்களை கொல்ல இந்த முறையை பயன்பாடு செய்கிறார்கள்.
    கேரளாவில் உள்ள மலபார் பழங்குடியினர் காதில் உள்ள வலிகளுக்கு இந்த மரத்தின் இலை சாற்றை இரண்டொரு துளி காதில் விடுகின்றனர் மற்றும் இதன் பட்டையை தமரக நோய்க்கு  பயன்படுத்துகின்றனர்.
    ஒரிசா மாநிலம் சுண்டர்கர்ஹ் மாவட்டதில் வாழும் பழங்குடியினர் இந்த மரத்தின் பட்டையை பொடியாக செய்து அரிசி சுத்தம் செய்த நீரில் கலந்து சீறுநீரில் ரத்தம் வரும் நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
    மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் இதன் பட்டையை பச்சையாக வாயிலிட்டு மென்று அதன் சாற்றை வயிறு புண், நெஞ்சு எரிசல் போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பயன் படுத்துகின்றனர்.
    சக்கரடட்டா என்னும் பழங்கால மருத்துவர் இதன் இலை கசாயத்துடன் நெய் கலந்து இதய நோய்களுக்கு பயன்படுத்தும் படி அறிவுறுத்தி உள்ளார் 
    இதன் பட்டை கஷாயம் புண்களை கழுவவும் மற்றும் இதன் இலை சாம்பல் தேள் கடி மற்றும் பாம்பு கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப் படுகிறது.
 இதய நோய்களுக்கான கசாயம் 

    மருதம்பட்டை, அரசம்பட்டை, வில்வப்பட்டை வகைக்கு சம அளவு 

சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கப்பட்டை இவை மேற்கண்டவற்றில்  

பாதி அளவு. இவற்றை அரைத்து 5 கிராம் எடுத்து 200 மி.லி நீரில் 

60 மி.லியாக காய்ச்சி வடித்து, காலை மாலை கொடுத்துவர,  

இருதயத்தை வன்மைப்படுத்தி,இருதய நோயாளிகளுக்கு  

சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 மரத்தில் பட்டையை எடுக்க வேண்டிய முறை: 
    மரத்தில் இருக்கும் மேல் சுற்றி உள்ள பட்டையை மட்டும் உரித்து எடுத்தால் போதும். பின் நிழலில் காயவைத்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருந்து கடைகளில் மருதம் பட்டை கசாயம், சூரணம்,  

அரிஷ்டம், மாத்திரை போன்றவை கிடைக்கின்றன. இதை தக்க  

மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்


புதன், 29 மார்ச், 2023

நலம் தரும் எண்ணெய் குளியல்

 நலம் தரும் எண்ணெய் குளியல்: 

தமிழர்களின் பாரம்பரிய முறைகளில் எண்ணெய்  குளியல் அல்லது எண்ணெய்   முழுக்கு மிக முக்கியமானது.

``சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” என்று நான்கு நாளைக்கு ஒரு முறை எண்ணெய் முழுக்கு எடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. குளிர் காலத்தில் வாரம் ஒரு  முறையும், வெயில் காலத்தில் வாரம் இரு முறை எண்ணெய்  முழுக்கு எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை,ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமை எண்ணெய் முழுக்கு செய்ய வேண்டும். ஆனால் இந்த பழக்கம் காலமாற்றத்தால் மாறி தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக மாறியுள்ளது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் ?

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பலம் பெற்று உடலில் எந்த நோயும் வராமல் உறுதிபடும் . உடலின்  அதிக உஷ்ண தன்மை குறைவதால் முடி உதிர்வு பிரச்சனை சீராகி தோல் வறண்டு போகும் பிரச்சனை சீராகிறது. உடலின் ரத்த ஓட்டம் சீராகுவதால் சோம்பல் போன்ற பிரச்சனை தீர்வதோடு, உடலின் குற்றங்கள் அனைத்தும் சீராகிறது.

எந்த எண்ணெய் சிறந்தது ?

நல்லெண்ணெயே மிகவும் சிறந்த எண்ணெய். இது போக விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றையும் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணைய்,விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றும் ஒரே அளவாக கலந்து முக்கூட்டு எண்ணெயாக பயன்படுத்தலாம்.மேலும் நோய்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் முழுக்கு கடைப்பிடிக்க படுகிறது. அதில் நொச்சி தைலம், சுக்கு தைலம் போன்றவை அடங்கும்.

எண்ணெய் குளியல் எப்படி எடுக்க வேண்டும் ?

பாரம்பரிய மருத்துவ முறைப்படி உடலில் உச்சி முதல் பாதம் வரை எண்ணெயை பரவலாக தேய்க்க வேண்டும். அதில் மூன்று துளி காதிலும், இரண்டு துளி மூக்கிலும் விட வேண்டும். பிறகு 30  முதல் 45 நிமிடங்கள் வரை அப்படியே உடலில் எண்ணெயை ஊறவிட வேண்டும். பிறகு, மூலிகை பொடி போட்ட வெந்நீரில் எண்ணெய் பிசகு போகும் வரை நன்கு குளிக்க வேண்டும். பிறகு சாம்பிராணி போட்டு தலை மற்றும் முடிக்கு தூபம் போட வேண்டும். நல்லெண்ணையில்  வைட்டமின் E  சத்து அதிகம் உள்ளதால் அது உடலின் தோலின் வயதாகும் தன்மையை நிறுத்தி, நம் தோலை பிரகாசம் அடையச் செய்யும்.

சளி பிடிக்காமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள் ?

சிலருக்கு எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்கலாம். அதற்கு ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு சிட்டிகை சுக்கு தூள், ஒரு பல் பூண்டு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை  60 மில்லி நல்லெண்ணையில் காய்த்து  எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்காது.

தலைக்கு தேய்த்து குளிக்க எது சிறந்தது ?

தலைக்கு தேய்த்து குளிக்க சீயக்காய் தான் சிறந்தது. ஷாம்புகளில் அதிக கெமிக்கல் இருப்பதாலும், அவை எண்ணெய் பிசகு சரியாய் போக்காது என்பதாலும் சீயக்காய் தான் சிறந்தது.

உடலிற்கு தேய்த்து குளிக்க  நலங்கு மா,பாசி பயறு மாவு சிறந்தது.

புதியதாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் உடல் சோர்வு, சளி பிடிக்கும் தன்மை இருக்கலாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சரியாக தொடர்ந்து கடைபிடிக்க இதுவும் படி படியாக மறைந்து போகும்.