செவ்வாய், 27 டிசம்பர், 2022

பஞ்ச முட்டி கஞ்சி

                பஞ்ச முட்டி கஞ்சி

"பஞ்சமுட்டிக் கஞ்சிநெடும் பட்டினிற் 
கொள்ளுங்கால் விஞ்சனில பித்தகபம் வீறாவாம் - விஞ்சு மிளைப்பகற்றுந் தாரக விலங்கணத்திற் கேற்குந் திளைப்ப வெழும் பூண்முலையே செப்பு"
      -பதார்த்தகுண சிந்தாமணி 1407

பஞ்ச முட்டி கஞ்சியின் சிறப்பு:

புரதம், ஊட்டச்சத்து குறைந்த நோயாளிகளின் உடல் தேற பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து பானம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 5 கிராம், உளுந்து 5 கிராம், சிறுபயறு 5 கிராம், துவரம் பருப்பு 5 கிராம், கடலை பருப்பு 5 கிராம், தண்ணீர் 500 மிலி துணி - 1

செய்முறை:

அனைத்து பொருட்களையும் தனித்தனியே லேசாக வறுத்து பின்னர் சுத்தமாக துணியில் தனித்தனியே முடிந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மண் பாத்திரத்தில் 500 மிலி தண்ணீர் விட்டு 8ல் ஒரு பங்காக சுண்ட காய்ச்சி முடிச்சை பிழிந்து எடுத்து விட்டு கஞ்சியை உண்ணவும்.

-சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
நன்றி.
facebook:
https://www.facebook.com/profile.php?id=100088792723019&mibextid=ZbWKwL

0 comments:

கருத்துரையிடுக