திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

சனி, 21 ஜனவரி, 2023

கஞ்சாவும் - சித்த மருத்துவம்

                             மரிஜுவானா,டோப், வீட், போன்ற வார்த்தைகளை இதற்கு முன் உங்களில்  சிலருக்கு மிகப் பரிச்சயமாக இருக்கலாம் அல்லது பல பேருக்கு புதியதாக  இருக்கும். இவை அனைத்தும் கஞ்சாவின் வேறு பெயரை குறிக்கும் .இந்த கட்டுரையில்  கஞ்சாவின் அரசியல்,வரலாறு, மருத்துவ பயன்கள் போன்ற அறியப்படாத செய்திகள் பற்றி நாம் காண்போம்.

கஞ்சா மீதுள்ள சட்டங்களும் அதன் வரலாறும்.


                                   இந்தியாவில் மயக்க மருந்துப்பொருள் மற்றும் மனநிலைக்கு ஊருசெய்யும் பொருள்கள் சட்டம்,1985 (The Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985),என்ற  சட்டத்தின்படி கஞ்சா மற்றும் அதனை சார்ந்த உபபொருள்களை நுகர்வதும் மற்றும் கஞ்சாவின்  மலர்,மொட்டு,பிற உபபொருள்களை வைத்து இருபதும்  சட்டவிரோதமான செயலக கருதப்படுகிறது,இதன்படி கஞ்சாவின் பயன்பாடு பல மாநிலங்கலில்  தடை செய்ய ப்படுள்ளது.இதே  சட்டத்தின்  கீழ் அபினும் வருகிறது.

                                   1985 ஆண்டுவரை இந்தியாவில் கஞ்சா,பாங்க்,சாரஸ் போன்றவை சட்டப்பூர்வமாக இருந்தது,ஆனால் அமெரிக்கா 1961 ஆண்டு போதை பொருட்கள் தடுக்க பல பிரச்சாரங்களை உலகம் முழுவதும் மேற்கொள்ளத் தொடங்கியது , இதை இந்திய, கஞ்சா பயன்பாடு  என்பது இந்தியாவின்  வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் என கூறி  அமெரிக்காவின்  பிரச்சாரத்தை நிராகரித்து வந்தது.எண்பதுகளின் தொடக்க காலத்தில் போதை பொருட்கள் பயன்பாடு என்பது அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுக்க,அமெரிக்கா தனது  சர்வாதிகாரத்தால் (The Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985) இந்தியாவில் போதை பொருள் தடுப்பு சட்டத்தை   நிறைவேற்றியது.இந்த சட்டமானது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு மாறும்,தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் சட்டபூர்வமாக கஞ்சா பயிரிடப்படுகிறது. 


தண்டனைகள்:

                               இந்த சட்டத்தின்படி 1 கிலோகிராம் அளவுக்கு குறைவாக கஞ்சா வைத்திருந்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 10000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் ,1 கிலோகிராம் மேல் 20 கிலோகிராமுக்கு குறைவாக வைத்து இருந்தால் 10 வருடம் சிறை அல்லது 1 லக்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் ,20 கிலோகிராம் மேலாக வணிக ரிதியாக வைத்து இருந்தால் 10 முதல் 20 வருடம் சிறை அல்லது 1 முதல் 2 லக்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் .அனால் கஞ்சா இலைகளுக்கு சிறிது விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது,உதாரணமாக கஞ்சா இலையில் இருந்து தயாரிக்கப்பதும்  பாங் போன்ற பொருள் இந்தியாவில் அனுமதி உண்டு.

                                        அனால்  ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை கடந்த 2022 ஆண்டு மருத்துவ ரீதியாக மற்றும் மருந்து அடிமைத்துவம் இல்லாமல் பொழுதுபோக்கிற்கு கஞ்சாவை பயன்படுத்த, அமெரிக்கா நாட்டின்  போதை பொருள்  தடுப்பு சட்டத்திலிருந்து கஞ்சாவிற்கு  விதிவிலக்கு அளிக்கப்பட்ட  சட்ட மசோதாவை  நிறைவேற்றியுள்ளது.ஐரோப்பிய நாடுகளும் கஞ்சாவை மருத்துவ ரீதியாக பயன்படுத்த  சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது, இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

வரலாறு:

                                        2200 கிமூவில் கஞ்சாவில் இருந்து வரும் நார்களை கொண்டு ஜப்பானியர்கள், சீனர்கள் துணிகள், கயிறு போன்றவைகளாக பயன்படுத்தி உள்ளனர்.

                                       இந்தியாவில் கஞ்சா பயன்பாடு என்பது 2000 கிமூ முதல் உள்ளது.அதர்வவேதத்தில் 5 புனித தாவரங்களுள் கஞ்சா மன நிலையை சாந்தி செய்யும் தாவரமாக கூறப்படுகிறது. கஞ்சாவானது உணவுப் பொருளாகவும், மருந்து பொருளாகவும் காலம் தொட்டு  இந்திய வரலாற்றில் பயணப்பட்டு வந்துள்ளது.சுஷ்ருதா சம்ஹிதாவில், கஞ்சா கண்நோய்,கபம்,பேதி போன்ற நோய்களை போக்கும் மருந்தாக என கூறப்பட்டுள்ளது.

                                       1798 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் பாங்,கஞ்சா,சரஸ் போன்றவற்றின்  புழக்கத்தை கட்டுப்பாடு செய்ய,அதன் மீது தனி வரி வசூல் செய்தது.பின் 1894 ஆம் கஞ்சாவை பற்றிய கள ஆய்வில் கஞ்சா பயன்பாடு என்பது மனிதனில் கோபத்தை அதிகரிக்க செய்து தீய செயல்களுக்கு வழிசெய்வதாக பிரிட்டிஷ் அரசாங்கம் ஆய்வு அறிக்கை வெளியிட்டது.

பாங்,தண்டை பானம்: 

                                     பாங்,தண்டை பானம்  என்பது நாம் தமிழ் நாட்டில் கேள்வி படாத  வார்த்தையாக இருந்தாலும்,வட இந்தியாவில் மிகபிரபலமான பானங்கள்.தண்டை அடிப்படையில் மசால பொருகள்,பால் மற்றும் பழ  வகைகளை கொண்டு செய்யப்படும் ஒரு பானமாகும்,பாங் என்பது தயிரை கொண்டு செய்யப்படும் பானம்  என்றாலும் ,இவை இரண்டுக்கும் மூல பொருள் கஞ்சா இலையாகும்.

                                    நமக்கு ஹோலிப் பண்டிகை என்றால் நினைவுக்கு வருவது கலர் கலர் பொடிகள் மட்டும்தான் அனால் வட இந்தியாவில் ஹோலி என்றால் கலர் கலர் பொடிகளுடன்,பாங்,தண்டை  பானங்கள் நினைவுக்கு வரும்.

                                   வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருத்தலத்தில் தண்டை பானம்  பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.பாங்,தண்டை பானங்களை  அளவாக உண்டால் உடலுக்கு மிக நம்மை தரக்கூடியது என அங்கு  நம்பப்படுகிறது, சிவன் ஆலகால விஷத்தை உண்ட பிறகு, தொண்டை நீல நிறம் அடைந்ததாகவும்,அந்த வலி போக பார்வதி தேவி பாங்கை அளித்தார் என்று கூறப்படுகிறது.ராஜஸ்தானில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாங் கடைகள்  ஜெய்சல்மர் மற்றும் புஷ்கர் நகரங்களில் உள்ளன.

சரஸ்:

                                     சரஸ் என்பது கஞ்சா செடியில் இருந்து எடுக்கப்பதும் ஒரு  பிசின் போன்ற பொருள்,இது மிக போதை தன்மை கொண்டது,  இது 1  கிராம் அளவில் 2000 ரூபாய் வரைக்கூட விற்பனை செய்யப்பதுகிறது   

கஞ்சா:

                                   தமிழகத்தில் கஞ்சாவின் இலைகள்  பெரும்பாலும்  புகையாக   பிடிக்கப்பதுகிறது, புகைபிடிப்பதற்காக  கிடைக்கப்படும் கஞ்சா இலையானது மஞ்சரி,மகரந்தம்,விதை,இலை காம்பு போன்றவையுடன் கலந்துதான் கிடைக்கும்,புகை பிடிப்பவர் இலையை மட்டும்  தனியாக பிரித்து எடுப்பர்,பின் புகை பிடிப்பதற்கு என பிரத்தியேகமாக விற்கப்படும் OCB பேப்பரை கொண்டு சிகரெட்டே போன்று செய்து புகை பிடிக்கின்றனர்.

கஞ்சாவில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் :

                                     கஞ்சா பல மூலக்கூறு சேர்மங்களைக் கொண்டுள்ளது,அதில்  டெல்டா-9 டெட்ராஹைட்ரோ கன்னாபினோல் (THC) மற்றும் கன்னாபிடியோல் (CBD) ஆகியவை மிகவும் பிரபலமானவை. THC என்பது (கஞ்சாவின்) மரிஜுவானாவின் முதன்மையான மூலப்பொருளாகும், இதற்கு  போதை தன்மையை உண்டாகும் செயல் உள்ளது, கஞ்சாவின் விதை,கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சா எண்ணெய் போன்றவை தற்போது மருந்து சந்தையில்  கிடைக்கிறது,அனால் இந்த பொருள்களில் போதை தன்மை உண்டாகும் THC குறைவாக உள்ளவாறு முறைப்படுத்தி விற்கப்படுகிறது,இப்படி கஞ்சாவில் இருந்து கிடைக்கும் பொருள்களை SUPER FOOD என்று அழைப்பார்கள்.

சித்த மருத்துவத்தில் கஞ்சா:

                                  மேற்கண்டவை நீங்கள் படித்ததால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும், போதைப் பொருள் என்று தடை செய்த ஒரு பொருளை, அதன் மருத்துவ பயனை கண்ட ஏகபத்திய அரசுகள் அதன் தடையை நீக்கி ஒரு ஒழுங்கு முறையில் அதை பயிர் செய்து விற்பனை செய்ய நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

                                  இந்த விஷயத்தில் நாம் நோக்க வேண்டியது என்னவென்றால் உலக நாடுகள்  இப்போது பின்பற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் 2000 ஆண்டுகளுக்கு  முதலே  சித்த மருத்துவத்தில்  நடைமுறையில் உள்ளது,எப்படியென்றால் கஞ்சாவிற்கு போதையூட்டும் நச்சு தன்மை இருந்தாலும், அதைப் போக்க சுத்தி முறை என்ற ஒரு முறை சொல்லி அதன் நஞ்சுத் தன்மையை நீக்கி, மருந்தாக தனியாகவும் பிற மருந்துகளுடன் கலந்தும் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கின்றனர். நச்சு தன்மையை நீக்கும் சுத்தி முறைகளை கூறியது மட்டுமல்லாமல் கஞ்சாவால் ஏற்படும் அடிமைத்தனதை  போக்கவும் இலைகள்ளியாதி குடிநீர், சுக்கு குடிநீர் போன்ற மருந்துகளை கூறியுள்ளனர்

                                   பல சித்தர்கள் கஞ்சாவை மருந்தாக பயன்படுத்துவது எப்படி என்று கூறியுள்ளனர் ஆனால் அதில் குறிப்பிட்டு சொல்லும்படி கோரக்கர் சித்தர் கஞ்சாவை  மூலாதாரமாக வைத்து பல மருந்துகளை இந்த உலகிற்கு கொடுத்துள்ளார், அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே அவர் பெயராலே அந்த மூலிகைக்கு அதாவது கஞ்சாவிற்கு கோரக்கர் மூலி என்று பெயர் ஒன்று உண்டு.

கஞ்சாவின் மருத்துவ பயன்:

"மூலக் கிராணியறு முன்புள்ள பேதிகட்டும்

சாலமயக் கும்பசியுஞ் சாருங்காண்ட் தூலஞ்செய்

வாதமொடு ஐயமும்போம் வன்காப்ப னுந்தொலையும்

கோதறுகஞ் சாச்சடைக்கு".

                                                                            - அகத்தியர் குண வாகடம் 

                                   கஞ்சாவினால் மூல நோய்,கிராணி நோய்,பேதி,அதிதூலம்,கப நோய், கரப்பான் நோய் இவை போகும், மிகுந்த பசி,மயக்க நோய் உண்டாக்கும் என கூறப்படுகிறது.

                                  ஆண்மை பெருக கொடுக்கப்படும்  லேகிய  வகைகளில் கஞ்சாவானது ஒரு சிறப்பு மூலப் பொருளாக சேர்க்கப்படுகிறது.இதை சேர்க்கப்படும் போது மருந்தின் வீரிய தன்மை பன்மடங்கு பெருகும்.

                                 பேதியை நிறுத்த பயன்படும் கட்டுவாதி குளிகை போன்ற மாத்திரைகளில் கஞ்சா கசாயம் சேர்க்கப்படுகிறது

                                 கஞ்சா பயன்படுத்துவது இந்தியா கலாச்சாரத்தில் ஒன்று என்றாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும் வட இந்தியாவை சார்ந்ததாக  உள்ளது, நம் ஊரில் ரோட்டோரத்தில் குப்பைமேனி செடியை பார்ப்பது போல் வட இந்தியாவில் கஞ்சா செடி மிகவும் செழிப்பாக வளர்ந்து கிடப்பதை அங்கு சென்றால் நாம் காணலாம்.

                                 இன்று வீதியில் நடமாடும் சாமியார்கள் பல பேர் கஞ்சாவை புகைத்துக் கொண்டு உலவுகின்றனர், இதை பார்த்த சிலர் என்னிடம்  சித்தர்கள் என்றால் கஞ்சா புகைத்துக் கொண்டு இருப்பார்களா ? என சித்தர் பெருமக்களை இழிவுபடுத்தும் விதமாக கேட்பர், சித்தர்கள் கஞ்சா புகைத்தார்களா என்ற கேள்விக்கு நான் கூறும் பதில் என்னவென்றால் அவர்கள் புகைத்திருந்தாலும்,அதை மருந்தாக புகைத்திருப்பார்கள் இன்றி போதைக்காக புகைத்திருக்க மாட்டார்கள். இன்று நடைமுறை பட்டிருக்கும் கஞ்சாவின் ஒழுங்கு நடவடிக்கை அக்காலத்திலேயே சித்த மருத்துவத்தில் சித்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அவர்கள் ஒழுக்கத்திக்கு மேற்கண்ட விஷயங்களே சிறு சான்று.

                                மனித மூலையில் ஆயிரக்கணக்கில்  கஞ்சா மூலக்கூறுகளுக்கு ரெசெப்டர்கள் உள்ளதாக ஆராய்ச்சி  முடிவுகள் கூறுகிறது,அனால் ஏன் இவ்வளவு ரெசெப்டர்கள் உள்ளது என மூழுமையான விடை கூறும் முயற்சியில் இன்னும் தற்கால அறிவியல் நடைபொட்டுக்கொண்டுதான் இருக்கிறது ,அனால் மேற் கண்டவற்றை படித்தல் இதற்கான விடை உங்களுக்கே  புரியும். 

நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ண மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 877-858-7349.


செவ்வாய், 17 ஜனவரி, 2023

கசகசா - சித்த மருத்துவம்

    உலக மக்கள் உணவே மருந்து என்ற நோக்கத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டனர்,அப்படிப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த உணவுகளில் ஒன்று தான் நம் வீட்டில் உள்ள கசகசா.இந்த கட்டுரையில் கசகசாவின் வகைகள்,வரலாறு, உலக அளவில் உணவுகளில் செய்யப்படும் கசகசாவின் பங்கு, அதில் கலப்படம் பின் முக்கியமாக சித்த மருத்துவத்தில் அதன் மருத்துவ தன்மை போன்றவற்றை காண்போம.

            அபின் செடியின் விதைதான் கசகசா, இது அபின் காய் பழுத்த பின்பு அதன் ஓடு காயவைத்து சேகரிக்க படுகிறது.இருப்தியோராம் ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாப்பி செடியின் அபினில்லிருந்து எடுக்கப்படும்  அல்கலாயிடுகல்  மருத்துவ ரீதியாக பயன்படுத்தவும் அதன் விதைகள் உணவுத் துறையில் பயன்படுத்தவும் சட்டப்பூர்வம் ஆக்கப்பட்டது.                           இந்தியா,ஆஸ்திரேலியா,துருக்கி,கனடா,மத்தியஅமெரிக்கா,தென்அமெரிக்கா,செக்குடியரசு,பிரான்ஸ்,போலந்து,அங்கிரி,ஈராக்,போலந்து,ரோமேனியா,ஸ்பெயின்,யுகஸ்லோ-வியா, நாடுகளில் அபின் பயிர் இடுவது சடட்ப்பூர்வமாக நடைபெறுகிறது.
                                        
 மனித நாகரிகத்தில் முதன் முதலில் 5000 கிமுவில் மெசபடோமியா பகுதியில்(இப்போதையகுவைத்,ஈராக் பகுதி) அபினி செடி அதன் பால் அதாவது அபினி மற்றும் விதைகளுக்காக  பயிரிட பட்டுள்ளது.அபின் மற்றும் கசகசாவை சுமேரியர்,கிரீட் போன்றவர்கள் பழங்காலம் முதலே உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.கிரீடில் இருந்த மினோவான் நாகரிகத்தில் கசகசாவை பால் மற்றும் தேனில் கலந்து அடிக்கடி அழும் குழந்தைகளுக்கு தந்துள்ளனர்.
                    உலக அளவில் கசகசாவின் நிறத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,அவற்றில் பொதுவாக உள்ள நிறங்கள் அவைகருப்ப,நீலம், கருநீலம்,வெள்ளை,நம் நாட்டில் பெரும்பாலும் வெள்ளை நிற கசகசாவை பயன்படுத்துகிறோம் ஜெர்மனியில் நீல நிறம் கசகசாவை பெரியதாக பயன்படுத்தி வருகின்றனர்.
               நம் இந்திய நாட்டில் உள்ள வெள்ளை நிற கசகசாவிற்கு மதிப்பு அதிகம், இது உணவை அழகு படுத்த சேர்க்கப்படும் போது அந்த உணவின் உருவ தன்மை மற்றும் நிறம் பெரிய அளவில் மாற்றம் அடையாமல்  இருபதால்  இது விரும்பத்தகாத உள்ளது. 


                     அபினியில் உள்ள நச்சு தன்மை கசகசாவில் மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது. குறிப்பாக  மார்பின்,திபெய்ன் போன்ற அல்களாடுயுகள். அபினியில் காணப்படுவதை விட மிக மிக குறைந்த அளவில் காணப்படுகிறது.

                     ஆனால் சிலர் இது உணவில் பயன் படுத்தும் போது அந்த குறிப்பிட்ட உணவிற்கு அடிமையாக்கும் தன்மை உண்டாக்குவதாக சிலர் நம்புகின்றனர்.



பாப்பி டீ :
  
                     கசகசாவில் இருந்து தயாரிக்கப்படும் பானம் பாப்பி டீ (கசகசா டீ), இது ஒருவிதமான போதைக்காக தயாரிக்கப்படுகிறது, அபின் செடியை விதைகாக அறுவடை செய்த பிறகும், அதன் மீது நஞ்சுத் தன்மை உள்ள அபின் அல்களாடுயுகள் ஒட்டி இருக்கும் இதை நீரில் கலந்து சலவை செய்து எடுத்தால் அது தனியாக பிரிந்து வந்துவிடும்.ஆனால் சிலர் சலவை செய்ய படாத கசகசாவை வாங்கி கொதிக்க வைத்துவ் வடிகட்டி தேனீராக குடிக்கின்றனர். ஆனால் இதை தயாரிக்க பெரிய அளவிலான கசகசா தேவை, ஒரு குறிப்பிட்ட போதை தன்மை உருவாக்க 400 கிராம் கசகசா தேவை, இப்படி தயாரித்த பானம் குடித்த 15 நிமிடத்தில் போதைத் தன்மையை காட்டத் துவங்கும் அது 24 மணி நேரம் வரை கூட நீடிக்கும்,போதைத் தன்மை நீரில் சலவை செய்யாத கசகசாவிற்கு மட்டுமே உள்ளது ஆனால் கசகசாவில் இதன் போதை தன்மை மிகக் குறைவு தான் அறுவடையின் போதுஅதன் மீது ஒட்டிக் கொண்டுள்ள பால்தான் இந்த நச்சுத்தன்மை உருவாக்குகிறது. இந்த மாதிரியான கசகசா தற்போது இணையதளங்களில் அதிகஅளவில் விற்கப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் இந்த பாப்பி டீயை ஊசி வழியாக ரத்த நாளங்களில் செலுத்தி போதை இன்பம் காண்கின்றனர்.இப்படி கசகசாவை போதைக்காக பயன்படுத்துவது நம் நாட்டில் அதிகம் பயன்பாட்டில் இல்லை என்றாலும் வெளிநாட்டினர் இவ்வகை போதைக்கு மிகவும் ஆளாகின்றனர்.இவ்வகை காரணங்களாலே சில உலக நாடுகள் கசகசாவை கூட தடை செய்து வைத்துள்ளனர்.
       
            நம் நாட்டில் கசகசா உணவில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது குறிப்பாக பிரியாணி, குருமா, இனிப்பு வகைகள் இது பெரும்பாலும் சேர்க்கப்பட்டுகிறது. வெளிநாடுகளில் கசகசா கேக்,பிரட், பேக்கரியில் உள்ள உணவு பொருட்கள் போன்றவற்றில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது, இன்னும் பல உணவு குறிப்புகளில் முக்கிய பொருளாக வெளிநாட்டினர் பயன்படுத்துகின்றனர்.

        இப்படி பயன்படுத்தி வரும் கசகசாவில் பெரும் அளவில் கலப்படம் செய்யப்படுவதுதான் நாம் எதிர் நோக்கும் விசயம்.அதிகப்படியாக செய்ய படும் இரண்டு கலப்படங்கள்.


1) முளைக்கீரையின்(Amaranthus Paniculatu) விதைகள்,இது கசகசாவுடன் பெரிய அளவில் கலப்படம் செய்யப்படுகிறது.
இதற்கான காரணம் கசகசாவின் விதை பார்பதற்கு சிறுநீரக வடிவில் காணப்படுகிறது, இதன் வடிவத்தை போலவே முளைக்கீரையின் விதைகளும் இருப்பதால் கலப்படக்கரார்களுக்கு எளிதாக கலப்படம் செய்யப்படுகிறது.
2) மைதா மாவு மற்றும் ரவை  போன்றவற்றை சிறிது நீர்விட்டு கலந்து, சிறிது நேரம் காயவைத்து பின் தகுந்த கண் உள்ள சல்லடையில் சலித்து எடுத்தால் செயற்கை கசகசா ரெடி.இதை அசல் கசகசாவிற்க சமபங்கு கலந்து விட்டால் போதும்,அசல் போலி வித்தியாசம் தெரியாது.
    மேற்கண்ட கலப்படங்கள் உடலிற்கு எந்த விட தீங்கும் உண்டாக்கது என்றாலும், உண்மையான பொருள் என்று நம்பி வாங்கும் வாடிக்கையாளர்களின் நிலைஎன்ன?
  மேற்கண்ட கலப்படங்கள் உண்மை தன்மை கண்டறி நிறை சோதனை வழிமுறைகள் நம் உணவு பாதுகாப்பு துறையுடம் உள்ளது.


இப்படி கலப்படங்கள் கசகசாவில் நாள்தோறும் இருந்த போதிலும்,
கசகசா உணவில் சிறிய பங்குதானே சேர்க்கப்பட்டுகிறது இதை நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரலாம், அதற்கு முன்  நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்,நமது வீட்டு அஞ்சறைப்பெட்டியில் கடுகு, சீரகம்,மிளகு, மஞ்சள் இவைகளுடன் கசகசாவும் ஒரு இடம் உண்டு,அஞ்சறைப்பெட்டியில் உள்ள அனைத்து பொருள்களை உணவாக பயன்படுத்தியது  மட்டும் இன்றி நாம் அவசர தேவைக்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தி வந்தோம்.உதரணமாக நம் பாட்டி நாம் குழந்தைகளாக இருந்தா போது  வயிற்றோட்டம் (பேதி)கண்டவுடன் கசகசாவை நீர் விட்டு அரைத்து தந்துள்ளார் மேலும் இரவில் நன்றாக தூக்கம் வரவும், ஆண்மை பெருகவும் கசகசா இலேகியம் போன்ற மருந்துகளை  நாம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
சித்த மருத்துவம் கசகசாவை பற்றி என்ன சொல்கிறது.

"கிருமி நமைச்சல் கிராணியதி சாரஞ்சிரநீர் அநித்திரைபோஞ் செப்பில்-உருவழகுங் காந்தியுமுண் டாகுங் கசகசா வின்குணத்தைத் தேர்ந்தவர்க்கு விந்துவுமாந் தேர்"
             - அகத்தியர் குண வாகடம்

கசகசாவினை  மருந்தாக பயன்படுத்தும்போது குடலில் உள்ள புலுக்கள், உடலில் உண்டாகும் நமைச்சல்( சொறி), பேதி,தூக்கம் இன்மை,தலைக்கனம், போன்றவை விலகும்.உடல் வன்மை, அழகு, ஆண்மை இவை உண்டாக்கும் என கூறுகிறது.
      இப்படிப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த கசகசாவில் கலப்படம் இருந்தால் அதன் உண்மையான மருத்துவ குணம் நாம் பயன்படுத்தும் போது நிச்சயம் கிடைக்காது.முடிந்த அளவில் உணவு காப்புறுதி பெற்ற கசகசாவை வாங்கி பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.



நன்றி,
மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி காவேரி சித்தா கிளினிக் சேலம்.
தொடர்புக்கு 8778587349








செவ்வாய், 10 ஜனவரி, 2023

மருந்தாகும் அபின்-சித்த மருத்துவம்


      தீதும் நன்றும் பிறர் தர வாரா 
                                     -புறநானூறு


    நன்மையும் தீமையும் கலந்தே இந்த உலகம் படைக்கப்பட்டது, இயற்கை என்பது அழகு என்று நம் நினைவில் உள்ளது, உண்மையில் இயற்கை ஒரு ஒழுங்கின்மை,அதை ஒழுங்கு படுத்தியதின் விளைவாகவே விவசாயம் தோன்றியது.
   ஏன் இந்த விரிவுரை என்றால் நாம் பார்க்க போகும் மூலிகை பொருள் அபின்,இதன் அரசியல்,சமூக பயன்பாடுகள், வரலாறு, முக்கியமாக சித்த மருத்துவத்தில் அதன் மருத்துவ பயன் பற்றி நாம் காண்போம்.
தற்போது இந்தியாவில் அபின் பயிரானது மிகவும் கட்டுப்பாடான சூழ்நிலையில் மட்டும் பயிரிடப்படுகிறது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,உத்திர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் சில மாவட்டங்களில் மட்டும் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆய்விற்காக பயிரிடப்படுகிறது.
    இதன் விதைகள் நவம்பர் மாதத்தில் பயிரிடப்பட்டு,பின் மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.இப்படி அறுவடை செய்யப்பட்ட அபின் அதாவது அபின் செடியின் பாலில் இருந்து மார்பின்,கோடின்,டிபேய்ன் போன்ற இரசாயன மூலக்கூறுகள் பிரித்து எடுக்கப்படுகிறது.பின் அதன் காய்களை உலர்த்தி அதன் விதைகள் சேகரிக்க படுகிறது,இதுவே நமது வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள கசகசாவாகும்.

        அபின் இந்தியவில் தடை செய்யப்பட்ட போதை பொருள்,
ஆனால் அதன் விதைகளுக்கு நம் நாட்டில் தடையில்லை,கசகசாவிற்கு போதை தரக்கூடிய தன்மை இல்லை,
இது நம் நாட்டில் தடை செய்யப்படவில்லை, ஆனால் விதைகள் மூலம் இந்த செடியை பயிர் செய்ய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது பல அயல் நாடுகளில் இதன் விதைகள் கூட தடை செய்யப்பட்டுள்ளது.விதைகள் எடுக்கப்பட்ட காய்களில் சிறிய அளவில் மார்பின் இருப்பதால் போதைக்கு புகையாக பிடிக்கப் படுகின்றது,இது வட இந்தியாவில் பெரும்சிக்கலாகஉருவெடுத்துள்ளது.சில விவசாயிகள் சட்டத்திற்கு புறம்பாக இதை தனி நபர்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
அபின் வரலாறு:
        அபினிக்கும் மனித இனத்திற்கு 6000 கால தொடர் பந்தம் இருந்து இருக்க வேண்டும், முதலில் இது எண்ணெய் தாவரமாக தரைக்கடல் பகுதியில் வளர்ந்தது என கருத்துப்படுகிறது.புத்தரின் இமையில் இருந்து அபின் செடி உருவானது என கூறப்படுகிறது.
    அபினி யின் வரலாறானது மேற்கத்திய நாடுகளான கிரீஸ்,
கிரித்தே சைப்ரஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற பகுதிகளில் அபினியின் பயன்பாட்டை பற்றி வரலாறு மற்றும் தொல்லியல் எச்சங்கள் கிடைக்கிறது.
    இந்தியாவில் முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு,பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து அபின் வணிகம் நடந்து வந்துள்ளது.பின் வந்த சுதந்திர இந்தியா அபின் பயிரிட மற்றும் விற்க சட்ட திட்டங்களை கொண்டு வந்தது.
   இத்தனை நாடுகள் ஏன் அபினை கண்டு அஞ்சி தடை செய்துள்ள காரணத்தை அறிய வரலாற்றை கொஞ்சம் பின் நோக்கி பார்க்கவேண்டும்.
முதலாம் அபின் போர்:
    சீனாவில் 1644 ஆண்டு பேரரசர் சூங் சென் புகையிலை பயன்பாட்டை அறவே தடை செய்த பிறகு போதைக்காக அபினி பழக்கம் பெருக தொடங்கியது,இதன் விளைவாக சீனாவின் தேவைக்கு பெரும்பாலும் இந்தியாவில் அபினி பயிரிடப்பட்டுள்ள.
    இதனை உற்று நோக்கிய பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி இந்த வணிகத்தில் மிகவும் ஆர்வம் காட்டியது. சீனாவில் அபினை இறக்குமதி செய்து அதற்கு மாற்றாக தேயிலையை வாங்கி கிழக்கு இந்திய கம்பெனி, இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளுக்கு விற்பனை செய்தது.1793-ல் பிரிட்டிஷ் அரசு சைனவுடன் அபின் வர்த்தகத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுத்தது ஆனால் அப்போது இருந்து மன்சூ பேரரசு அதை சில காரணங்களால் நிராகரித்து விட்டது.
     இதற்கு பின் அபினை கிழக்கு இந்திய கம்பெனி பெருவாரியாக சீனாவுக்கு கடத்த தொடங்கியது.சீன மக்களை அபின் போதைக்கு உட்படுத்தி அவர்களின் உடல் மற்றும் மன நலத்தை கெடுத்து அவர்களின் வேலை செய்யும் ஆர்வத்தை சிறிது சிறிதாக இழக்க வைத்தனர். சீனாவிற்கு உள் வரும் அபினியை அந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை, இதன் காரணமாக சீன அரசு பிரிட்டிஷாரின் அபின் சேமிப்பு கிடங்குகளை தீ வைத்து எரித்தது.
    இதன் விளைவாக பிரிட்டிஷ் 1840 ஆம் ஆண்டு சீனா மீது போர் தொடுத்தது.இதுதான் முதல் அபின் போர் ,போரின் இறுதியில் சீனா தோல்வி அடைந்தது,பின் அதற்கு ஈடாக சீனாவில் அபின் விற்பனை செய்ய அனுமதியிம்,சில நிலபுலன்களை பிரிட்டிஷ்க்கு ஈடாக கொடுத்தது.
இரண்டாம் அபின் போர்:
    இந்த போர் நடந்து சுமார் 15 ஆண்டுக்குள் பிரிட்டிஷ்க்கும் சீனாவிற்கும் மற்றொரு போர் நடந்தது துரதிஷ்டவசமாக இதிலும் சீனா தோற்றது இதற்கு ஈடாகவும் பெருவாரியான பணம் மற்றும் இடங்களை சீனா அந்த நாட்டிற்கு இழப்பீடாக தந்தது.
    இந்த அபினி போர்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க சமூக பண்பாட்டு பொருளாதார அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தின. முன்பு கூறியபடி பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய மண்ணிலிருந்து அபின் பயிரை வளர்த்து வந்தது. சீனாவில் தடை முயற்சிகள் நீண்டு கொண்டு போக போக பிரிட்டிஷ் அரசாங்கம் வெவ்வேறு புதிய வணிக யுக்திகளை கண்டுபிடித்து இந்தியாவின் அபினியை சீனாவிற்கு அதிக அளவில் கடத்தியது.தற்போது இந்தியாவிற்கு பெருவாரியாக ஆப்கானிஸ்தானில் இருந்து அபின் கடத்திக் கொண்டு வரப்படுகிறது.
        இப்படிப்பட்ட பொருளாதார சீரழிவை உண்டாக்கி பெரும் போர்களை உருவாக்கும் என்பதால் பல உலக நாடுகள் அபினியை தடை செய்து வைத்துள்ளது.

சித்த மருத்துவத்தில் அபின்:
    அபின் இது கசகசா காயின் பால்,அபின் செடியின் தாவரவியல் பெயர் Papever Somniferum,Linn.
" நல்லவபி னிக்குணத்தை நாடறியும் நாம்புகல்வ  
தல்லகுன்மம் வாதம் அருஞ்செவிநோய்-பல்லின்வலி
பேதிமந்தம் அத்திநோய் பீனசம்போம் வன்மையுண்டாம் 
சாதியதி ரச்சுத்தி தான்"

                 -அகத்தியர் குண வாகடம் 

    நன்று சுத்தி செய்த அபின் வயிற்றில் தோன்றும் குன்மம்,வாத நோய்கள்,காது நோய்,பல் வலி,பேதி ,மந்த நோய் , அத்தி நோய்,பீனிச நோய் போன்றவை போக்கி உடலுக்கு நல்ல வன்மையை உண்டாக்கும் என கூறியுள்ளனர்.
    இதற்கு Analgesic,Anti spasmodic,Sedative, Stimulant, Diuretic போன்ற முக்கிய செயல் திறன் உள்ளது.
    அக்காலத்தில் காலரா நோய்(ஊழி நோய்) வந்த நோயாளிகளுக்கு பேதி உண்டாகி, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து(dehydration)இறந்து விடுவார்கள்.இந்த நோய் பெருவாரியாக இறப்பை அந்த காலத்தில் உருவாக்கியது. 
     இந்த dehydration-னால் ஆன இறப்பை பேருவாரியாக கட்டுபடுத்தி வைத்தது அபினியால் ஆன மருந்துகளே, அவைகளில் சில ஊழி மெழுகு,சாமளாதேவி மாத்திரை,கபாட மாத்திரை போன்றவை ஆகும்.இதில் குறிப்பாக கபாட மாத்திரை தற்போது வந்த கோவிட் பெரும் தொற்றில் பேதி குறிகுணங்களுடன் இருந்த நோயாளிகளுக்கு சிறப்பாக வேலை செய்தது.
    அபின் சேர்ந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் கழிச்சல் மற்றும் பல நோய்களுக்கு, நோயின் வலிகளை போக்க மட்டும் அல்லாமல் அதனால் வந்த பிற இன்னல்களையும் போக்க பயன்படுகிறது.
       தற்காலத்தில் நாம் வீட்டில் அபினியை பயன்படுத்த முடியாது, அனால் அபினியின் விதைக்கு அதாங்க கசகசாவுக்கு அபின் போல சில மருத்துவ குணம் உள்ளது,அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ண மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 877-858-7349.