செவ்வாய், 3 ஜனவரி, 2023

மாட்டு இறைச்சியும் தமிழ் மருத்துவமும் - மாட்டு இறைச்சியைப்பற்றி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மருத்துவம் எவ்வாறு விளக்குகிறது

  தமிழ் இலக்கியங்களில் மாட்டு இறைச்சியைப்பற்றிய சில விவரங்கள்:


     இவ்வுலகில் வாழும் பாக்டீரியா முதல் திமிங்கிலங்கள் வரை  புறச் சூழல், வாழ்வியல் சூழல், ஏதுவான சூழல் சார்ந்தே தத்தமது உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன. 
ஒருவரின் உடை மற்றும் உணவுப்  பழக்கம் அவரது உரிமையும் விருப்பமும் சார்ந்த ஒன்றே.
 தற்போது‌ பல விவாதங்களை அடைந்து வருகின்ற மாட்டு  இறைச்சி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று  என்பது மட்டும் அல்லாமல் தற்போதும் தமிழகத்தின் உணவிலும் மற்றும் நம் நாட்டு ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

மாட்டு இறைச்சி பற்றி சங்க காலம் நமக்கு கூறுவது என்ன?
சங்க காலப் பாடல்களில் ஒன்று.
வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை….”
அகநானூறு – 309

பசுவை உண்ணல்:
பசுவினைப் பலியை பற்றி செய்தி அகநானூற்றில் காணப்படுகிறது. 
பசு புனிதமாகவும் தெய்வமாகவும் கருதப்படுவதற்கு முன்னர் உணவிற்காகப் அக்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 
இவ்வாறு பசு உணவிற்காகப் பயன்படுத்தப் படுவதைப்
 பின்வரும் நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.

    
            வெட்சி வீரர்கள் பால்தரும் பசுக்கூட்டத்தை கவர்ந்து சென்ற  கரந்தை வீரர்களைக் கொன்று பசுவை கொண்டுச் சென்றனர்.போகும் வழியில் அவர்களுக்கு பசிக்கவே, கொண்டுச் சென்ற பசுக்களில் கொழுத்தது எது என பார்த்து அதை வெட்டி சமைத்து உண்டார்களாம் (அகம்:309) 
            எருதினைக் கொன்று அதன்    தொடையினை உண்ணல் (அகம்:265) போன்ற செய்திகள்இலக்கியங்களில் காணமுடிகிறது. 
               பசு வதை மற்றும் அதை உணவாக பயன்படுத்துவது போன்ற செய்திகள் நமக்கு கிடைக்க
பெற்றாலும்.மணிமேகலையில் போன்ற நூலில் உயிர்க்கொலை கூடாது,பசுவை கொல்லக் கூடாது போன்ற செய்திகள்இடம்பெறுகிறது."
                ஆனாலும், இன்றும் பசுவை கொன்று உண்ணும் பழக்கம் நம் தமிழகத்தில் இருந்துவருகிறது.
இருந்தாலும் சிலர் இதை உண்பதை தவிர்க்க தான் செய்கிறார்கள்.
     ‌‌           சங்கப் பாடல்களில் “ஊன்” உணவு பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன,யானை,புலி முதலியவைகளை உண்ட வரலாறு கூட உண்டு.
                முக்கியமாகப் பசுவைக் கொன்று தின்ற செய்தி பழைய பாடல் களில்காணப்படுகிறது.

'புலையன் ஆவுரித்துத் தின்றான். பாணன் கன்றை உரித்துத் தின்றான். (நற்3-9) வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர்". (அகம் 129

"சிறுபாணாற்றுப்படை” எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா மேனிச் சில் வளையாய மொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்” எனக் கூறும் "(175-77) 

                  இங்கு விருந்தாளிகளுக்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச்   சோறும் கொடுத்த செய்தி விவரிக்கப்படுகிறது.
                 உழவர் பெருமக்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு (129)நன்னூல் உரையில் பாணர் பசு இறைச்சியைத் தின்ற செய்தி வருகிறது. (சூத் 310) 
பசுவைக் கொன்று பாறையில் அதன் இறைச்சியைக் காய வைத்த ஒரு நிகழ்ச்சியை அகநானூறுல் இடம்பெற்றுள்ளது (390).
           மேற்கண்டவை மூலம் தமிழ் நாம் அறிவது தமிழ் மக்கள் பசு  தெய்வமாகவும்,அதன் மூலம் கிடைக்கும் பொருள்களை உணவாகவும்,இதர தேவைகளுக்கும் பயன்படுத்தினர் என்று அறியப்படுகிறது.

சரி தமிழ் மருத்துவம் மாட்டு இறைச்சியைப்பற்றி என்ன கூறுகிறது:

மாட்டு இறைச்சியின் குணம்:
              மேலே கொடுக்கப்பட்டுள்ளது பாடல் மற்றும் விளக்கம் பதார்த்த குண விளக்கம் என்ற நூலில் இருந்து கிடைக்கப்பெற்றது,இதில் மாட்டின் இறைச்சி உண்பவருக்கு சகல நோய் உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 சரி மாட்டின் பால்,நெய்,கோமூத்திரம், சாணம், தயிர்,நெய் இதை பற்றி தமிழ் மருத்துவம் என்ன  கூறி உள்ளது.

பசும் பாலின் குணம்:
பசு மூத்திரம் குணம்:
பசு நெய் குணம்:
பசு வெண்ணெய் குணம்:
பசு மோரின் மருத்துவ குணம்:
பசு சாணத்தின் மருத்துவ குணம்:
  மாட்டின் பால், தயிர்,நெய், சாணம்,கோமூத்திரம் போன்றவை மருத்துவ குணம் பெற்றது என்பது இவற்றில் சில  அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டது .
        மாட்டின் இறைச்சி சகல நோய்களை உண்டாக்கும் எனவும்,
 அதன்  இறைச்சி தவிர்த்து இன்ன பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாக பதார்த்த குண விளக்கம் நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மக்களின் இறைச்சி வகையுள் மாட்டு இறைச்சி இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது,மாட்டின் இறைச்சி அப்படி சகல நோய்களையும் உண்டாக்கும் என்றால் அதற்கான நவின ஆராய்ச்சி முடிவுகள் அவசியம்.

நன்றி
மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி
தொடர்புக்கு 8778587349.
இக்கட்டுரை எழுத ஆதாரம்:
1)https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4589:2018-06-14-12-06-16&catid=65:2014-11-23-05-26-56
2)http://fbtamildata.blogspot.com/2017/09/2_21.html?m=1
3) பதார்த்த குண விளக்கம் -காசீம் முகைதீன் ராவுத்தர் 
4)நோய் இல்லா நெறி டாக்டர்- மருத்துவர் கோ துரைராசன்

0 comments:

கருத்துரையிடுக